கொல்கத்தா திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடி யில், இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடல மாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தீவிர விசா ரணை மேற்கொண்டு வருவதாக மேற்கு வங்க காவல்துறை கூறினாலும், இன்னும் உண்மையான குற்றவாளியை கைது செய்யவில்லை.
இந்நிலையில், மாணவி படுகொலையை கண்டித்து திங்களன்று நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். தில்லி, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகா ரம் தொடர்பாக கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொலை தொ டர்பான விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதாக கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“கல்லூரிக்கு வந்தாலே பயமாக இருக்கிறது”
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை யான மருத்துவ மாணவியின் தோழியான ஸ்ரீதாமா பானர்ஜி போராட்டக்களத் தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறு கையில்,”நான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து விட்டாலே, பாதுகாப்பான சூழலில்தான் இருப்பேன் என்று நானும், எனது குடும்பத்தினர் இதுவரை நம்பி வந்தோம். ஆனால் தற்போது இங்கு இருப்பது எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. என் குடும்பத்தி னரும் அச்சத்தில் உள்ளனர்” என கூறி கதறி அழுதார்.
மாணவி கும்பல் பாலியல் வன்கொடுமையா?
மருத்துவ மாணவி உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் ஹசன் முஷ்டாக் செய்தி யாளர்களிடம் கூறுகையில்,”மாணவியின் உடலில் பலத்த தாக்குதல் நடத்தியதற்கான தடயங்கள் இருந்தன. அதனால் அவர் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளார்.இது ஒரு நபரின் செயல் அல்ல என்றும் தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் ஒருவரை மட்டுமே கைது செய்துவிட்டு, எங்கள் வேலையை முடித்து விட்டோம் என்று சொல்வது எங்களின் கோபத்தை அதிகரிக்கிறது” எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இடதுசாரிகள் என்றாலே பயம்”
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் - பாஜக கூட்டு
மருத்துவ மாணவி படு கொலையை கண் டித்தும், மாணவிக்கு நீதி வழங்கக் கோரியும் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்பு ஞாயிறன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழி யர்கள், மாதர் அமைப்பினர், வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பி னர் போராட்டம் நடத்தினர். சிபிஎம் போராட்டத்திற்கு ஆதரவாக அதிகளவில் மக்கள் திரண்டதைக் கண்டு மிரண்ட ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, போலீசார் மூலம் போராட்டத்தை தள்ளு முள்ளு மற்றும் லேசான தடியடி மூலமாக கலைத் தது. ஆனால் சனியன்று அதே பகுதியில் போராட்டம் நடத்திய பாஜக மீது மேற்கு வங்க போலீசார் தடியடி நடத்த வில்லை. இதன்மூலம் இடதுசாரிகள் மீதான பயத் தால் திரிணாமுல் - பாஜக கூட்டு சேர்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள் ளது.